அம்மா கவலைப்படாத.. நான்..... 12 வயது சிறுவனின் நெகிழ்ச்சி செயல்.. தஞ்சையில் சுவாரசியம்.!!
Thanjavur child sales vada, samosa etc.. due to poverty of the family
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மனோஜிப்பட்டி பகுதியை சார்ந்தவர் வரதராஜன். இவர் கொத்தனாராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவியின் பெயர் சுமதி. இவர்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். பெண் குழந்தை அங்குள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இரு ஆண் குழந்தையில் ஒருவர் ஆறாம் வகுப்பும், மற்றொருவர் நான்காம் வகுப்பும் பயின்று வருகின்றனர்.
வரதராஜனின் வருமானத்தை வைத்தே குடும்பம் பிழைப்பு நடத்தி வந்த நிலையில், மூவரும் பள்ளிக்கு சென்று படித்து வந்தது மேலும் சுமையை அதிகரித்தது. இருந்தாலும் மூவரும் படிக்க வேண்டும் என்பதில் குடும்பத்தினர் உறுதியாக இருந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 1 வருடத்திற்கு முன்னதாக நரம்பு தளர்ச்சி நோயின் காரணமாக வரதராஜன் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் பணிகளுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்படவே, வருமானம் இல்லாமல் குடும்பம் அல்லாடியாது. சுமதிக்கு கைத்தறி நெசவு தொழில் தெரியும் என்பதால், அதன் மூலமாக குறைந்தளவு வருமானத்தை சுமதி ஈட்டி வருகிறார். தற்போது ஊரடங்கு காரணமாக மிகவும் சிரமமான சூழல் ஏற்பட்டுள்ளது. அடுத்தகட்ட வருமானத்திற்கு வழி தெரியாமல் குடுமப்த்தினர் தவித்துள்ளனர்.
இந்த விஷயத்தை புரிந்துகொண்ட சுமதியின் ஆறு வயது மகன், " அம்மா கவலைப்படாத.. நான் எதாவது பணிகளுக்கு செல்கிறேன் " என்று கூறியுள்ளான். இதனைக்கேட்ட தாயின் கண்களில் கண்ணீர் சூழவே, வீட்டிலேயே வடை மற்றும் போண்டா, சமோசா போன்ற உணவுகளை தயாரித்து விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி பிளாஸ்டிக் பெட்டியில் தினமும் தயார் செய்யப்படும் பண்டங்களை சைக்கிளில் வைத்து சிறுவன் வீதி வீதியாக விற்பனை செய்து வருகிறான்.
இதன் மூலமாக பெரும் வருமானத்தை வைத்து குடும்பம் இயங்கி வரும் சூழலில், நாளொன்றுக்கு 10 கிமீ தூரம் வரை சென்று உணவு பண்டங்களை விற்பனை செய்து வருகிறார். காலை 8 மணிக்கு வீட்டில் இருந்து புறப்படும் சிறுவன், மதியத்திற்கு மேல் வீட்டிற்கு திரும்புகிறான். தினமும் களைப்புடன் கால் வலியையும் சேர்த்து சந்தித்து வந்தாலும், சிறுவன் தனது குடும்பத்திற்க்காக கஷ்டப்பட்டு உழைத்து வருகிறான். சிறுவனின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Thanjavur child sales vada, samosa etc.. due to poverty of the family