தற்கொலைக்கு முயற்சித்த கணவன்., கதறிய மனைவி.! பேருந்து நடத்துனர், ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல்..!! குவியும் பாராட்டுக்கள்.!!
Thanjavur Bus Conductor and Driver Save Couple life Suicide Attempt Facebook SneHan Punnagai Aruvi Post Goes Viral
பேருந்தின் ஓட்டுநர், நடத்துனர், சக பயணி தம்பதிகளின் வாழ்க்கையை காப்பாற்றிய நிகழ்வு குறித்த முகநூல் பதிவு வைரலாகியுள்ளது.
சமூக வலைத்தளமான முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த பதிவில், " தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, புதுக்கோட்டைக்கு த.நா 55 என். 0552 என்ற அரசு பேருந்து, இரவு 08:45 மணியளவில் 10 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது.
இந்த பேருந்தில் பயணம் செய்த 2 பயணிகள் புனல்குளத்தில் இறங்கிவிட, பின்னர் பேருந்து கந்தர்வகோட்டை பேருந்து நிறுத்தத்திற்கு சென்றது. அங்கு இருந்த நடுத்தர வயது தம்பதி, விரைந்து வந்து பேருந்தில் ஏறினார்கள். பின்னர், இருவரும் ஒருவரையொருவர் பார்த்து அழுதுகொண்டு இருந்தனர்.
அவர்களிடம் ஏன் அழுகிறீர்கள்? என்று கேட்க முயற்சிக்கையில் அவர்கள் பதில் அளிக்கவில்லை. பின்னர், இரண்டு, மூன்று முறை கேட்ட பின்னர், நாங்கள் இருவரும் சண்டையிட்டோம். சண்டையில் மனைவி பேசவில்லை என்று கணவர் கஞ்சிரான் இலை என்பதை தின்றுவிட்டார் என கூறிய பெண்மணி, திடீரென உரத்த குரலில் கதறி அழுதார்.
இதனைக்கேட்ட பயணிகள் பதறியடிக்க, பேருந்தின் நடத்துனர் விரைந்து வந்து தன்னிடம் இருந்த தண்ணீர் பாட்டிலை பெண்ணிடம் கொடுத்து, அதனை முழுவதுமாக குடித்து கணவரை வாந்தி எடுக்க சொல்லுங்கள் என்று கூறினார். இதனைக்கேட்ட ஒரு விவகாரமான பயணியோ, பேருந்து நாறிடும் என்று கூற, நடத்துனர் உயிரே போகும் தருவாயில் உள்ளது. நீங்கள் இருக்கை மாறி அமருங்கள். பேருந்து நாரினால் நாங்கள் சுத்தம் செய்துகொள்கிறோம் என்று கூறினார்.
பின்னர், நடத்துனருக்கு மனம் கேளாது சக பயணிகளிடம் தண்ணீர் கேட்க, பேருந்தின் ஓட்டுனரிடம் தகவலை தெரிவித்துள்ளார். இதனையடுத்து, பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை எந்த நிறுத்தத்திலும் நிறுத்தாமல் விரைந்து மருத்துவமனை வளாகத்திற்கு கொண்டு சென்று இறக்கிவிட்டார். மேலும், பணம் செலவுக்கு கைகளில் உளளதா? வேண்டுமா? என்றும் பேருந்தின் ஓட்டுநர், நடத்துனர் விசாரித்துள்ளனர்.
அந்த நல்லுள்ளம் கொண்ட பேருந்தின் நடத்துனர் பெயர் பரமசிவம். அவர்களை கட்டியணைத்து வாழ்த்தி, பாராட்டி பேசிவிட்டு வந்தேன் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதம் எங்குமே மரித்துவிடவில்லை.. சில இடங்களில் பல காரணத்தால் அவை செயலாற்றாமல் போய்விடுகிறது அவ்வுளவே. மனிதம் உலகம் இருக்கும் வரை, கொடுங்கோல் ஆட்சி நடந்தாலும், எதோ ஓர் சூழ்நிலையில் நிலைத்து நிற்கத்தான் செய்யும்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Thanjavur Bus Conductor and Driver Save Couple life Suicide Attempt Facebook SneHan Punnagai Aruvi Post Goes Viral