அறநிலையத்துறையின் ரூ.10 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆட்டைய போட நினைக்கும் கும்பல்.. பேய் குடியிருப்பு திகில்கள்.!!
Thanjavur Building Occupy by Pvt frauds
தஞ்சாவூரில் உள்ள தெற்கு வீதி பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமாக இருக்கும் குடியிருப்புகள் கேட்பாரற்று இருக்கிறது. கடந்த 2002 ஆம் வருடத்தில் இணை ஆணையர் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்கையில் வாகன விபத்தில் சிக்கியுள்ளார்.
இந்த விபத்தில், அதிகாரியின் மனைவி இறந்துவிட்ட நிலையில், அவரது ஆவி பேயாக மாறி குடியிருப்பில் சுற்றி வருவதாக வதந்தி கிளமிட்டுள்ளது. இதனையடுத்து அங்கு பிற இல்லத்தில் தங்கியிருந்த அதிகாரிகளும் வேறு இடத்திற்கு வீடு பார்த்து புறப்பட்டு சென்றுள்ளனர்.
பல அதிகாரிகளும் இந்த குடியிருப்பில் தங்க மறுப்பு தெரிவித்ததால், கட்டிடங்கள் பாழடைந்து காணப்பட்டுள்ளது. மேலும், தஞ்சையின் முக்கிய இடத்தில் இக்குடியிருப்புகள் இருந்தும், வீட்டில் ஆட்கள் இல்லை. இந்த நிலையில், இந்த இடங்கள் ரூ.10 கோடி மதிப்புடையவை என்று தெரியவருகிறது.
இந்த நிலங்களை தனியார் கும்பலொன்று ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்வதாக புகார் எழுந்துள்ள நிலையில், குடியிருப்பு பகுதியை மாட்டு தொழுவமாக மாற்றியுள்ளனர். இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Thanjavur Building Occupy by Pvt frauds