தாய், தந்தையின் பிரிவு.. அண்ணன் - தங்கை மனமுடைந்து தற்கொலை முயற்சி.. அனாதைபோல மயங்கிக்கிடந்த பரிதாபம்.!
Thanjavur Brother Sister Suicide Attempt due to Parents Divorce Issue 10 April 2021
தாயும் தந்தையும் கைவிட்டதால் மனமுடைந்த அண்ணன் - தங்கை விஷம் அருந்தி சாலையில் மயங்கி கிடந்த சோகம் அரங்கேறியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள குடந்தை சறுக்கை பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி காந்திமதி. இந்த தம்பதிக்கு கரன்ராஜ் என்ற மகனும், இந்துமதி என்ற மகளும் உள்ளனர். இந்த தம்பதிகள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 15 வருடங்களுக்கு முன்னதாக விவாகரத்து பெற்றுள்ளனர்.
கணவரை விட்டு பிரிந்த காந்திமதி தனது இரண்டு குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். தற்போது மகனும் - மகளும் வளர்ந்து வந்த நிலையில், இருவருக்கும் 18 வயது பூர்த்தி அடைந்து விட்டதால் தந்தை வீட்டுக்குச் செல்லுமாறு காந்திமதி கூறியுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த பிள்ளைகளை ஆத்திரத்தில் வீட்டில் இருந்து அடித்து துரத்திய நிலையில், தந்தையின் வீட்டிற்கு சென்ற பிள்ளைகளை ஏற்றுக்கொள்ள மனமில்லாத கனகராஜ், தன் சொத்தை அபகரிக்க பிள்ளைகள் வந்துள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
காவல்துறையினரை வைத்து தன் குழந்தைகளை வீட்டில் விட்டு வெளியேற்றிய நிலையில், தாயும் தந்தையும் விரட்டி தங்க வசதியும் இல்லாமல் தவித்த சகோதர - சகோதரி தற்கொலை செய்ய முடிவு எடுத்து இருக்கின்றனர்.
இதையடுத்து, கைகளில் இருந்த காசை வைத்து விஷம் வாங்கி குடித்துவிட்டு, கீழவாசல் பகுதியில் மயங்கி கிடந்துள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், இருவரையும் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது போன்ற எண்ணம் உள்ளவர்களுக்கு குழந்தைகள் எதற்கு, திருமணம் எதற்கு, அற்பத்தனமான வாழ்க்கை எதற்கு?... பச்சிளம் பிஞ்சுகளின் மனதில் எத்தனை ஏக்கம், வேதனை இருந்திருந்தால் தற்கொலைக்கு முயற்சி செய்திருப்பார்கள். மேலை நாடுகளின் குடும்ப பழக்கத்தை மேலிட்டு ஆதரிக்கும் பல நுனிப்புல் மேய்ந்தார்களின் கண்கள் இதுபோன்ற துயரங்களை மட்டும் காண தவறுவது ஏன்? என்று தான் இன்று வரை புரியவில்லை.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Thanjavur Brother Sister Suicide Attempt due to Parents Divorce Issue 10 April 2021