தாய் போல பார்த்துக்கொண்ட அண்ணனை கொடூர கொலை செய்த தம்பி.!
Thanjavur Brother murder Police Investigation
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை பகுதியை சார்ந்தவர் இளங்கோ. இவரது இளைய சகோதரர் பாலமுருகன். இவர்கள் இருவரும் அவ்வப்போது சண்டையிடுவது வழக்கம். மேலும், பாலமுருகன் பணிக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.
இதனால் அவ்வப்போது செலவிற்கு தனது அண்ணனிடம் பணம் வாங்கி செலவு செய்து வந்த நிலையில், பாலமுருகனிற்கு அண்ணனிடம் பணம் வாங்கி செலவு செய்து வந்தது பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக மிகுந்த மன வேதனையுடன் இருந்து வந்த நிலையில், தந்து அண்ணனின் தலையில் கல்லைப்போட்டு பாலமுருகன் கொலை செய்துள்ளார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், இளங்கோவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Thanjavur Brother murder Police Investigation