#தமிழகம் || பிரபல ரவுடிக்கு மரண தணடனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.!
thanjai rowdy raja case judgement
கொலை வழக்கு ஒன்றில் கைதாகி இருந்த, தஞ்சாவூரை சேர்ந்த பிரபல ரவுடி ராஜாவுக்கு மரண தண்டனை விதித்து, கும்பகோணம் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
ராஜா என்ற கட்ட ராஜா மீது 10க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கொலை வழக்கு ஒன்றில் ராஜா கைது செய்யப்பட்டு கும்பகோணம் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்குகள் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி இன்று காலை தீர்ப்பு வழங்குவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை தீர்ப்பை வெளியிட்ட நீதிபதி அவர்கள் ரவுடி ராஜாவுக்கு தூக்குத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
English Summary
thanjai rowdy raja case judgement