#தமிழகம் || பள்ளி சிறுமியை காதல் வலையில் வீழ்த்திய நாடக காதலனுக்கு அரிவாள் வெட்டு.!
Thanjai Drama Lover Attacked
தஞ்சை மாவட்டம், வாளமர்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 21). இவர் ஐ.டி.ஐ படித்துள்ளார்.
அதே பகுதியை சேர்ந்த +2 படித்து வரும் மாணவி ஒருவரை ஆனந்த் காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த மாணவியின் அத்தை மகனான உதயகுமார் ஆத்திரமடைந்தார்.
நேற்றிரவு வாளமர்கோட்டை குளக்கரையில் ஆனந்த் நின்று கொண்டிருந்தார். அப்போது உதயகுமார் தான் மறைத்து எடுத்து வந்த அரிவாளால் ஆனந்தை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளார்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆனந்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் தஞ்சை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள உதயகுமாரை தேடி வருகின்றனர்.
English Summary
Thanjai Drama Lover Attacked