நேற்று இரவு கண்ணீர் விட்டு அழுத தமிழிசை!! காரணம் இதுதான்!! - Seithipunal
Seithipunal



கடந்த 19 ஆம் தேதி நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிவடைந்தது. தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி  நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவை தேர்தல் முடிவுகளின் படி பாஜக கூட்டணி 352 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 91, மற்றவை 99இடங்களில் வெற்றிபெற்றது.
இந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் பாஜக கூட்டணி 352 இடங்களை பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க போகிறது.

தமிழகத்தில் திமுக கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்றது. தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட அணைத்து இடங்களிலும் தோல்வி அடைந்துள்ளது.



 

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் "நேற்று இரவு என் கண்களில் கண்ணீர் கொட்டியது. ஆனால்  தோற்றுவிட்டோம் என்பதற்காக அல்ல என கூறியுள்ளார். 

ஆங்கில தொலைக்காட்சியில் நேற்று எங்கள் அமைச்சர் பேட்டி கொடுக்கும்பொழுது, "ஒரு எம்பியைகூட தரமறுத்துவிட்ட தமிழகத்திற்கு தண்ணீர் தருவதுவதுதான் இந்த ஆட்சியின் முன்னுரிமை" என்று பேசியதைக்கேட்டதும் எனது கண்களில் ஆனந்தக்கண்ணீர் வந்தது என்று பதிவிட்டுள்ளார். 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thamilisai sountharajan crying yesterday


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->