பிரேமலாதா இப்படி பேசி இருக்கக்கூடாது!! அதிரடியாக தெரிவித்த தம்பித்துரை!!  - Seithipunal
Seithipunal


கரூரில் இன்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களிடம்," தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிமுகவிற்கு உதவி செய்கிறோம் என சொல்லலாம்.

ஆனால், அவர்கள் தயவில் தான் தற்பொழுது ஆட்சி நடக்கிறது என கூறக்கூடாது. ஆட்சி செய்யும் அதிகாரத்தை சட்டமன்றம் தான் தருகிறது. ஆனால் அங்கு அதிமுக உறுப்பினர்கள் தான் பெரும்பான்மையாக இருக்கின்றனர்.

ஜெயலலிதா  கடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டு நல்ல ஆட்சியை அமைத்து கொடுத்தார். அதை தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் தான் சிறந்த முறையில் நடத்துகின்றனர்.

பிரதமர் மோடி சமீபத்தில் பிரச்சாரத்திற்கு வந்த போது ஜெயலலிதாவையும், எம்.ஜி. ஆரையும் வெகுவாக பாராட்டி சென்றார். மேலும், சென்னை மத்திய ரெயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்டுவதாக கூறியுள்ளார். 

அதிமுக கட்சி ஒரு வலிமையான மக்கள் இயக்கம். இது தமிழக மக்களின் உரிமைக்காகவும், மாநில சுய ஆட்சிக்காகவும், மொழியை காப்பதற்காகவும், பெரியார் மற்றும் அண்ணா வழியில் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. 

மேலும், வருகிற சட்டமன்ற இடைத் தேர்தலில் 21 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். இதனை தொடர்ந்து ஜெயலலிதா தந்த 123 சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை நிச்சயம் 124ஆக மாறும் நிலை ஏற்பட இருக்கிறது" என அவர் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thambithurai says about premaladha


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->