'தேமுதிக வந்தால் தான் அதிமுக வெற்றி பெரும் என்ற நிலையில்லை" தம்பிதுரை அதிரடி!!  - Seithipunal
Seithipunal


பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து குறைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், " 18 ஆண்டுகளாக திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி செய்தது.

அப்பொழுது தமிழக மக்களுக்கு எதுவும் செய்யாதவர்கள் இப்போது மட்டும் மீண்டு வந்து என்ன செய்வார்கள்?அது ஒரு பயனற்ற கூட்டணி. அதை வீழ்த்துவது தான் எங்களது குறிக்கோள். 

நாங்கள் கூட்டணி அமைக்க காரணமும் அதுதான். அதிமுக கூட்டணி இல்லாமலும் வெற்றி பெற்றுள்ளது. தேமுதிக வந்தால் தான் அதிமுக வெற்றி பெரும் என்ற நிலையில்லை. ஆனால், தேமுதிக வரவேண்டும் என்பது எங்களது ஆவல். 

ஸ்டாலினால் அவர் வீட்டில் உள்ள பிரச்சனைகளையே தீர்க்க முடியவில்லை, நாட்டில் உள்ள பிரச்சனைகளையா தீர்க்க போகிறார்கள்? இவர்கள் வந்தால் மொழியையோ இனத்தையோ காப்பாற்ற முடியாது

தேர்தல் நேரத்தில் ஒரு கட்சி பல கட்சிகளோடு கூட்டணி பேச்சுவார்ததை நடத்துவது என்பது வழக்கமானது. இதை துரைமுருகன் விமர்சிப்பது அநாகரிகம். இதை வைத்தே அது எப்படிப்பட்ட கட்சி என தெரிந்து கொள்ளலாம். " என அவர் கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thambidurai says about DMDK


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->