சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள்  எவ்வாறு செயல்பட வேண்டும்? ரசிகர் மன்றம் கலைக்கப்பட்டதற்கான காரணம் என்ன! நடிகர் அஜித் வெளியிட்ட அறிக்கை!! - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித் தனது ரசிகர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 

* அரசியலில் எனக்கும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு உண்டு, அதை யார் மீதும் திணிப்பது இல்லை. மற்றவர்கள் கருத்தை என் மீது திணிக்கவிட்டதும் இல்லை, இதையே தான் என் ரசிகர்களிடமும் எதிர்பார்க்கிறேன் .

* எனக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் எந்த ஆர்வமும் இல்லை. நான் அரசியல் செய்யவோ, மற்றவர்களுடன் மோதவோ இங்கு வரவில்லை. என் மீதோ, என் ரசிகர்கள் மீதோ அரசியல் சாயம் வந்துவிடக் கூடாது என்பதற்காக தான் ரசிகர் இயக்கங்களை கலைத்தேன்.

* சமூக வலைதளங்களில் தரமற்ற முறையில் மற்ற நடிகர்களை, விமர்சகர்களை வசை பாடுவதை நான் என்றுமே ஆதரிப்பதில்லை.  

* ரசிகர்கள் கல்வி, தொழில், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.  சட்டம், ஒழுங்கை மதித்து நடக்க வேண்டும்.கடமையைச் செவ்வனே செய்வதையே ரசிகர்களிடம் எதிர்பார்க்கிறேன். 
 
* என்னுடைய தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே என்பதை தெளிவாக புரிந்து வைத்துள்ளேன். அரசியல் திரைப்படங்களில் அரசியல் சாயம் வரக்கூடாது என்பதில் தீர்மானமாக உள்ளேன்.
 
* சராசரி பொதுஜனமாக வரிசையில் நின்று வாக்களிப்பதே அதிகபட்ச அரசியல் தொடர்பு. நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை.

இவ்வாறு அந்த அறிக்கையில் தல அஜித்குமார் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

THALA AJITH STATEMENT


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->