குளத்திற்கு அருகே வெட்டுக்காயத்துடன் பிணமாக வாலிபர்.. காவல்துறை விசாரணை.!!
Tenkasi Youngster murder Police investigation 19 April 2021
தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்ச்சத்திரம் மேலப்பாவூர் கிராமத்தை சார்ந்தவர் முகேஷ் (வயது 27). இவர் கூலித்தொழிலாளியாக இருந்து வருகிறார். முகேஷிற்கு இன்னும் திருமணம் முடியாத சூழ்நிலையில், தனது பாட்டியுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று காலை முகேஷ் அங்குள்ள கருப்பசாமி கோவில் மேலப்பாவூர் குளத்தில் உடலில் வெட்டுக்காயத்துடன் சடலமாக இருந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் பாவூர்ச்சத்திரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், முகேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Tenkasi Youngster murder Police investigation 19 April 2021