மகள் கண்முன்னே வெட்டப்பட்ட தந்தை.. அலறித்துடித்த சிறுமி.. நிலத்தகராறு கொடூரங்கள்.!
Tenkasi Sankarankoil Man Murder Attempt Argue Land Issue 5 July 2021 Video Trending Social Media
நிலத்தகராறில் மகளின் கண்முன்னே தந்தையை அரிவாளால் வெட்டிய நிலையில், தந்தையை கண்டு மகள் அலறும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் அருகேயுள்ளது ஆட்கொண்டார்குளம் கிராமம். இந்த கிராமத்தை சார்ந்தவர் தங்கராசு. இதே பகுதியை சார்ந்தவர் மருதையா. இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 5 வருடமாக நிலத்தகராறு பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று காலை தங்கராசு நிலத்திற்கு வருகை தந்த மருதையா, இது தன்னுடைய நிலம்., நீ இங்கே வரக்கூடாது என வாக்குவாதம் செய்துள்ளார். இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்த நிலையில், இதனை தங்கராசுவின் மகள் விடியோவாக பதிவு செய்துகொண்டு இருந்தார்.
இதன்போது, வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த மருதையா, சற்றும் எதிர்பாராத வகையில் வாகனத்தில் இருந்த அரிவாளை எடுத்து தங்கராசுவை வெட்டினார். தனது கண்முன்னேயே தந்தை வெட்டுக்காயம் அடைந்ததை கண்டு பதறிப்போன மகள், அலறித்துடித்து கூச்சலிட்டார்.
சிறுமியின் அலறலை கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் விரைந்து வரவே, பொதுமக்கள் வருவதை கண்ட மருதையா சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார். படுகாயமடைந்த தங்கராசு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார்.
இந்த கொலை முயற்சி சம்பவம் தொடர்பான விடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகவே, இவ்விசயம் தொடர்பாக சின்னக்கோவிலான்குளம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Tenkasi Sankarankoil Man Murder Attempt Argue Land Issue 5 July 2021 Video Trending Social Media