முதல் பொண்டாட்டி என்னய விட்டு போயிட்டா.. நீயும் போயிடாத..! நடுரோட்டில் கொடூர கொலை.! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 38). இவரது முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்ட நிலையில், அங்குள்ள கேசவபுரம் கீழப்புதூர் பகுதியைச் சேர்ந்த கஸ்தூரி என்ற 20 வயது பெண்மணியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். 

கடந்த 7 மாதங்களுக்கு முன்னதாக இவர்களுக்கு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கஸ்தூரி கோபித்துக் கொண்டு கீழபுதூரில் உள்ள தனது பாட்டியின் வீட்டிற்கு சென்றுள்ளார். 

இந்நிலையில், பாட்டியின் வீட்டுக்கு சென்ற மனைவியை அழைத்து செல்ல கண்ணன் கீழப்புதூர் சென்ற நிலையில், கஸ்தூரி வேலைக்கு சென்று விட்டதாக கூறிய அவரது பாட்டி, கஸ்தூரி வந்ததும் ஊருக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார். சிறிது நேரம் காத்திருந்த கண்ணன், கிளம்புவதாக கூறி சென்றுவிட்டு புளியரை சாலையில் லாரிகளுக்கு பின்னால் சென்று பதுங்கியுள்ளான். 

இதன்போது, வேலையை முடித்துவிட்டு வந்த கஸ்தூரியை இருசக்கர வாகனம் வைத்து மோதிய கண்ணன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளான். இந்த சம்பவத்தில் கஸ்தூரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து கண்ணன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான். 

தகவலறிந்த காவல்துறையினர் கஸ்தூரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் கண்ணனை கைது செய்த நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், " கஸ்தூரி இளைஞர் ஒருவரை காதலித்து வந்த நிலையில், இது பெற்றோருக்கு தெரியவந்தது. 

இதனையடுத்து, குடும்பத்தினர் கட்டாயத்தால் கண்ணனை கஸ்தூரி திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில், முதல் காதலை மறக்க முடியாமல் தவித்த கஸ்தூரி, காதலனுடன் சேர்ந்து வாழப் போவதாக கண்ணனிடம் தெரிவித்து வந்துள்ளார்.

ஏற்கனவே முதல் மனைவி ஓடிவிட்டதால், நீயும் என்னை விட்டு செல்லாதே என்று கண்ணன் கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த கஸ்தூரிக்கும் - கண்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக ஏற்பட்ட தகராறில் கஸ்தூரி பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கண்ணன் கஸ்தூரியை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து கண்ணனை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tenkasi Puliyarai Wife Kasthuri Murder by Husband Kannan 20 April 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->