அண்ணியோடு பேசியவனை மிதித்தே கொலை செய்த கொழுந்தன்.. தென்காசியில் பரபரப்பு சம்பவம்.!
Tenkasi Man Murder by Neighborhood Police Investigation Arrest Culprit 19 Sep 2021
பக்கத்து வீட்டினை சார்ந்த ஆட்டோ ஓட்டுநர் அண்ணியுடன் பேசியதால் ஆத்திரமடைந்த கொழுந்தன், ஆட்டோ ஓட்டுனரை கொலை செய்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள அழகப்பபுரம் பகுதியை சார்ந்தவர் இராமகிருஷ்ணன் (வயது 41). இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கடந்த 16 ஆம் தேதி தனது வீட்டிற்கு முன்புறம் இராமகிருஷ்ணன் நின்று கொண்டு இருக்கையில், அங்கு வந்த பாண்டியராஜன் என்பவரின் மகன் வழக்கறிஞர் சதீஷ்குமார் (வயது 34), இராமகிருஷ்ணனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், இராமகிருஷ்ணனை தாக்கி கீழே தள்ளி காலால் மிதித்து கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், விரைந்து வந்து இராமகிருஷ்ணனை மீட்டு, படுகாயத்துடன் இருந்த அவரை தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால், இராமகிருஷ்ணன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் குறித்து தென்காசி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்கிய நிலையில், இராமகிருஷ்ணனின் உறவினர்கள் கொலையாளியை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த இராமகிருஷ்ணனின் உடலை பெற முடியாது என மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடந்துள்ளது. இதனையடுத்து, காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சதீஷ் குமாரை காவல் துறையினர் கைது செய்து மேற்கொண்ட விசாரணையில், " எனது அண்ணியிடம் இராமகிருஷ்ணன் அவ்வப்போது பேசி வந்தார். இதனை நான் பலமுறை கண்டித்தேன். சம்பவத்தன்றும் எனது அண்ணியுடன் இராமகிருஷ்ணன் பேசிக்கொண்டு இருந்தார்.
இதனால் அப்போதும் அவரை கண்டித்த நிலையில், கண்டிப்பு எங்களுக்குள் வாக்குவாதத்தை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த நான் அவரை கீழே தள்ளி உதைத்தேன். அவர் உயிரிழந்துவிட்டார் " என்று தெரிவித்துள்ளார். சதீஷை குமாரை கைது செய்துள்ள காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.
சதீஷ் குமாரின் சகோதரர் சுரேஷ் குமார் காவல் துறையில் ஏட்டு பொறுப்பில் இருக்கிறார். சுரேஷ் குமார், சதீஷ் குமாரின் தந்தை பாண்டியராஜன், ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Tenkasi Man Murder by Neighborhood Police Investigation Arrest Culprit 19 Sep 2021