கேங்கா போவோம், மொத்தமா தூக்குவோம்.. ஒரே கடைதான்.. கைதான 5 பெண்கள்.!!
Tenkasi Kadayam Cotton Clothes shop Saree Theft Police Arrest Woman Gang
ஜவுளிக்கடையில் நான்குமுறை திருடிய 5 பெண்கள், கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் அம்பை - தென்காசி மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஜவுளிக்கடையில், பெண்கள் குழுவாக சேர்ந்து திருடுவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியானது.
இந்த வீடியோ தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு இதுதொடர்பான விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில், இந்த கடைக்கு சேலை வாங்குவது போல வந்த ஐந்து பெண்கள் சேலையை திருடியுள்ளனர்.
இதன்போது அவர்கள் கையும் களவுமாக பிடிக்கப்பட்ட நிலையில், இந்த பெண்கள் நான்கு முறை அந்த கடையிலேயே திருடியதும் அம்பலமானது. இதுதொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், காவல் துறையினர் பெண்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், அவர்கள் ஸ்ரீவைகுண்டம் வாய்க்கால் பகுதியை சார்ந்த லட்சுமி, பார்வதி, நம்பிக்கையம்மாள், சுப்பம்மாள், ஆச்சிஅம்மாள் என்பது தெரியவந்துள்ளது. மேலும், இவர்கள் இந்த கடையில் மொத்தமாக 25 சேலைகளை பலமுறை வந்து திருடி சென்றதும் அம்பலமானது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Tenkasi Kadayam Cotton Clothes shop Saree Theft Police Arrest Woman Gang