கிளியை வளர்த்து, குரங்கு கையில் கொடுத்த கொடூரம்.. துடிதுடிக்க அரங்கேறிய வெறிச்செயல்.. தென்காசியில் கண்ணீர் பரிதாபம்.!! - Seithipunal
Seithipunal


18 வயது பெண்ணின் மர்ம மரணம் கடையநல்லூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் வேலப்பநாடார் கிராமத்தை சார்ந்தவர் ஐயா கண்ணு (வயது 42). இவன் ஏற்கனவே மனைவியை கொலை செய்து சிறையில் இருந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கிராமத்திற்கு விடுதலையாகி வந்துள்ளான். 

இந்த நிலையில், கொடூரன் ஐயாக்கான்னு, அதே பகுதியை சார்ந்த 18 வயது சத்யா என்ற பெண்மணியை திருமணம் செய்துள்ளார். இருவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்து சில மாதங்களே ஆகிறது. 

இந்த தருணத்தில், பெண்மணி சடலமாக தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தலைமறைவான ஐயாக்கண்ணை தேடி வருகின்றனர்.

தங்கையின் மரணத்தை அறிந்து ஆத்திரமடைந்த சத்யாவின் சகோதரர்களான பாண்டித்துரை மற்றும் முத்துக்குமார், ஐயா கண்ணின் தந்தையை தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த நபரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

பின்னர் இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்து சத்யாவின் சகோதரர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tenkasi girl murder case police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->