சாத்தான்குளத்தை போல தென்காசியில் மற்றொரு சம்பவம்.. அரங்கேறிய சோகம்.!!
Tenkasi Family men suicide due to Police Torture
தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரம் பகுதியை சார்ந்தவர் அருள்ராஜ். இவர் கடந்த மாதத்தின் போது அமலாகிருந்த ஊரடங்கில், இரு சக்கர வாகனத்தில் விதிமுறையை மீறி பயணம் செய்ததற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அருள்ராஜின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தை மீண்டும் அபராதம் செலுத்தி பெற சென்ற அருள்ராஜை, காவல் துறை அதிகாரிகள் அடித்து, உதைத்து அரைநிர்வாணப்படுத்தி கொடுமை செய்துள்ளனர். மேலும், தனது கணவரை காணவில்லை என்று கூறி அருள்ராஜின் மனைவி காவல் நிலையத்திற்கு சென்று பார்க்கையில், கணவர் அரைநிர்வாண கோலத்துடன், உடலில் காயத்துடன் இருந்துள்ளார்.
இதனையடுத்து அங்கு உறவினர்களை அழைத்து சென்று, காவல் நிலையத்தில் சண்டையிட்டு கணவர் மற்றும் வாகனத்தை மீட்டு வந்த நிலையில், தன்னை காவலர்கள் அடித்து துன்புறுத்தியது தொடர்பாக மனைவியிடம் விஷயத்தை கூறி கதறியழுதுள்ளார். இதன்பின்னர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அருள்ராஜ் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து அருள்ராஜின் மனைவி ஜமுனா இது தொடர்பான புகாரை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில், காவல் அதிகாரிகள் மற்றும் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ் உள்ளிட்டோரின் மீது விசாரணை மேற்கொள்வதாக வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கியதாக தெரியவருகிறது.
ஆனால் உயர் அதிகாரிகள் தரப்பில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காது இருந்த நிலையில், இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்த அருள்ராஜ் விஷமருந்தி தற்கொலை செய்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக ஜமுனா மதுரை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து வழக்கு தொடுத்துள்ள நிலையில், இந்த விஷயம் தொடர்பாக ஆலங்குளம் காவல் கண்காணிப்பாளர் பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Tenkasi Family men suicide due to Police Torture