பாலியல் வழக்கில் கைதாகியும் அடங்காத கொட்டம்... நாடககாதலில் விழவைத்து, கருக்கலைப்பிற்கு பேரம் பேசி அரங்கேறிய கொடூரம்.! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் உள்ள புளிச்சிகுளம் பகுதியை சார்ந்தவர் சுப்புராஜ் (வயது 26). இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், இதே கிராமத்தை சார்ந்த 16 வயது சிறுமியிடம் பேசி பழகி வந்துள்ளார். 

கடந்த மார்ச் மாதம் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, அவரை தனிமை பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இது குறித்து வெளியே கூறினால் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். 

இதனால் பயந்துபோன சிறுமி செய்வதறியாது திகைக்கவே, தற்போது கர்ப்பமாகியுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக சிறுமி தனது தாய்க்கு தெரிவிக்கவே, சுப்புராஜின் பெற்றோரிடம் இது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனைக்கேட்ட இருவரும் கருவை கலைத்துவிடுமாறும், ரூ.2 இலட்சம் பணம் தருகிறோம் என்றும் தெரிவித்துள்ளனர். இதனைத்தவிர்த்து பெண் வீட்டாருக்கு மிரட்டலும் விடுக்கப்பட்ட நிலையில், வேறு வழியின்றி சிறுமியை அழைத்து சென்று கருக்கலைப்பு செய்துள்ளனர். 

இந்த விஷயம் எப்படியோ கீழப்பாவூர் சமூகநலத்துறை அதிகாரிக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் தென்காசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சுப்புராஜை கைது செய்தனர். 

மேலும், கருக்கலைப்பிற்கு உடந்தையாக இருந்த சுப்புராஜின் பெற்றோர் சுந்தர் ராஜ், மாரியம்மாள் மற்றும் சிறுமியின் தாய் ஆகியோரையும் கைது செய்துள்ளனர். மேலும், காமுகன் சுப்புராஜ் ஏற்கனவே கடந்த மே மாதம் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்த நிலையில், மீண்டும் குடும்பத்துடன் கம்பி எண்ண சென்றுள்ளான்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tenkasi Drama Love Culprit abused girl and abort baby police arrest family


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->