கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட நகை.! தானே வெளிவந்த சோகம்.!  - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் இருக்கும் பெண்ணாடம் அருகே கோனூர் செல்லியம்மன் கோவில் உள்ளது. தற்போது இந்த கோவிலில் ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது.

கடந்த 14-ந் தேதி வீதி உலா முடிந்து சிலைகள் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்துள்ளது. அடுத்த நாள் சென்று பார்த்த பூசாரிக்கு அதிர்ச்சி.அம்மன் கழுத்தில் இருந்த 6 பவுன் நகை கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது. இதன் காரணமாக ஊரில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. 

அதன் பின்னர் இதுகுறித்து பெண்ணாடம் காவல் துறையினரிடம் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து கோவில் பூசாரி செம்புலிங்கம், மைக்செட் உரிமையாளரிடம் முதல் கட்டமாக விசாரணை நடத்தினர். ஆ

இந்நிலையில் கோவில் பூசாரி காலை கோவில் வளாகத்தில் இருந்த குப்பை மேட்டில் இருந்து ஜொலிஜொலிக்கும் பொருள் ஒன்றை வைத்துள்ளார். அருகே ஓடி சென்று பார்க்க அது அம்மன் கழுத்தில் இருந்து திருட்டு போன 6 பவுன் நகை என்பதை கண்டு கொண்டார். 

பின்னர் அதனை ஊர்முக்கிய பிரமுகர்களிடம் அறிவித்துள்ளார். அதன் பின்னர் அந்த மீட்கப்பட்ட நகைக்கு சிறப்பு வழிபாடு நடத்தி கொண்டாடினர். குற்றவாளிகள் யார் என்பதை போலீசார் தேடி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

temple jewells theft


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->