திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதலன்…. பெற்றோருடன் காதலன் வீட்டில் குடியேறிய இளம்பெண்..! - Seithipunal
Seithipunal


திருமணம் செய்வதாக கூறி தலைமறைவான காதலன் வீட்டில் இளம்பெண் பெற்றோருடன் குடியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கிராமத்தில் 19 வயது கல்லூரி மாணவி வசித்து வருகிறார். இவர் கல்லூரிக்கு பேருந்தில் செல்லும் போது மதன்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறவே இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், மதன்குமார் அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி பல முறை உல்லாசமாக இருந்துள்ளார்.

இதனால், அந்த பெண் தற்போது கர்பமாக உள்ளார். இதனை அறிந்த அந்த பெண்ணின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இதனை அடுத்து, மதன்குமார் மற்றும் அவரது தாயாரிடம் விசாரணை நடத்திய போது அவர் அந்த மாணவியுடன் திருமணம் செய்து வைக்க ஓப்புகொண்டார்.

ஆனால், மதன்குமாரும் அவரது தாயாரும் தலைமறைவானதால் ஆத்திரமடைந்த அந்த மாணவி தனது பெற்றோரிடம் மதன்குமாரின் வீட்டிற்கு சென்றார். அங்கு பூட்டை உடைத்து தனது பெற்றோருடன் குடியேறினார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கதினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், அந்த பெண் அதனை மறுத்து மதன்குமாரின் வீட்டிலே தங்கியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Teen who moved into boyfriend home with parents


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->