அடிக்கடி செல்போன் பேச்சு., கணவனின் கண்டிப்பால் இளம்பெண் தற்கொலை...!!
Teen commits suicide because her husband reprimanded her
அடிக்கடி செல்போனில் பேசி வந்ததை கணவன் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் கொண்டமநாயக்கன் பட்டியில் வசித்து வருபவர் கார்த்திகேயன்(35). இவருக்கு திருமணமாகி அனிதா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
அனிதா செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனை கார்த்திகேயேன் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாததால் அவர் தூக்குமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Teen commits suicide because her husband reprimanded her