மாணவிகளிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்.. ஆசிரியர் மீது பாய்ந்தது போக்சோ..! - Seithipunal
Seithipunal


மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரைக் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம், அய்யூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், அந்த பள்ளியின் வணிகவியல் ஆசிரியராக இருந்த ஜெயராமன் பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொடர்பான வார்த்தைகளைப் பேசுவது ஆபாசமாக நடந்து கொள்வது, அவர்களைப் சீண்டுவது போன்ற பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதுகுறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் கூறவே அதிர்ச்சி அடைந்த அவர்கள் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் ஆசிரியர் ஜெயராமன் வழக்கு பதிவு செய்து அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர். ஆசிரியர் தொடர்ந்து மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Teacher who sexually abused children Arrested in POCSO


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->