வகுப்பறையில் பிறந்த நாள் கொண்டாட்டம்... ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்..!
Teacher Suspend
பள்ளியில் பிறந்தநாள் கொண்டாடிய ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்தனர்.
கரூர் மாவட்டம், பங்களாபுத்தூரில் அரசு ஒன்றிய பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் ஆங்கில ஆசியராக மணிகண்டன் என்பவர் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அவரது பிறந்தநாளை வகுப்பறையில் கொண்டாடி கேக்கை தலைமையாசிரியர் சித்ரா அவருக்கு ஊட்டுவது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. இதனை அடுத்து, இந்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இதனை அடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட கல்வி அலுவர் தலைமயாசிரியர் சித்ராவையும் ஆங்கில ஆசிரியர் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.