4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியருக்கு தர்ம அடிகொடுத்த கிராம மக்கள்..!
Teacher Sexually abused 4th grade student
பள்ளி மாணவிக்கு பாலியல் அளித்த ஆசிரியருக்கு கிராம மக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், நன்னட்டாம்பாளையத்தில் அரசு ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் பாபு என்பவர் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், அந்த ஆசிரியர் 4ம் வகுப்பு மாணவி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார். இதனால், பயந்து போன அந்த சிறுமி தனது பெற்றோரிடம் இதுப்பற்றி கூறியுள்ளார். இதனை கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர் கிராம மக்களிடம் அழைத்து சென்று ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் ஆசிரியராய் அங்கிருந்து அழைத்து சென்றனர். முதன்மை கல்வி அலுவலருக்கு இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட அவர்கள் ஆசிரியரை பணியிடை மாற்றம் செய்ய உத்தரவு பிறப்பித்தனர்.
English Summary
Teacher Sexually abused 4th grade student