மாணவிக்கு ஆபாச மெசெஜ்.. ஆசிரியர் மீது பாய்ந்தது போக்சோ...! - Seithipunal
Seithipunal


ஆபாச படங்கள் அனுப்பி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் தளி கரட்டுமடம் பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் அசோக் என்பவர் அந்த மாணவியின் வாட்ஸ் அப்க்கு தினமும் ஆபாசப் பதிவுகள் மற்றும் ஆபாச படங்களை தொடர்ந்து அனுப்பியுள்ளார்.

இதுபற்றி அந்த மாணவி பெற்றோரிடம் கூறாமல் இருந்த நிலையில் அவளின் இந்த செயல் தொடர்ந்துள்ளது ஒரு கட்டத்தில் பயந்து போன மாணவி குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு புகார் அளித்தார்.

உடனே அவர்கள் உடுமலை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் அவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுப்பது உறுதியானது. இதனையடுத்து அசோக்கை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Teacher arrested in POCSO


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->