மாணவர்களை கட்டாயப்படுத்தி ஒரின சேர்க்கை.. உடற்கல்வி ஆசிரியர் கைது..! - Seithipunal
Seithipunal


விடுதி மாணவர்களை கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ராணிப்பேட்டையில் சமூக நலத்துறை சார்பில் நடத்தப்படும் செல்வதற்கான அரசினர் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு பயிலும் பெரும்பாலான மாணவர்கள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியில் உடற்கல்விஆசிரியராக பணியாற்றிவரும் செந்தில்குமார் என்பவர் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. கடந்த 2008ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் பல மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, மாணவர்கள் விடுதி காப்பாளர் புகார் அளித்தனர். இதனைக் கேட்ட அதிர்ச்சியடைந்த விடுதி காப்பாளர் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போது செந்தில் குமார் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Teacher arrasted who sexually abused Student


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->