மதுபோதையில் பாலத்தில் இருந்து தவறி விழுந்த டீ மாஸ்டர் உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


மது போதையில் பாலத்தில் இருந்து தவறி விழுந்த டீ மாஸ்டர் உயிரிழந்துள்ளார்.

நீலகிரி பகுதியை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி (40). இவர் கோவை மாவட்டம் மத்தம்பாளையம் பகுதியில் தங்கி அங்குள்ள பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் சம்பவத்தன்று ராஜீவ்காந்தி அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு, மந்தம்பாளையம் கருணவிநாயகர் கோவில் அருகே நடந்து சென்றுள்ளார்.

அப்பொழுது அங்கிருந்த பாலம் அருகே சென்றபோது திடீரென நிலை தடுமாறி ராஜீவ் காந்தி பாலத்தில் இருந்து கீழே விழுந்து உள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த ராஜீவ் காந்தியை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜீவ்காந்தி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த நாயகன்பாளையம் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tea master falls from bridge and dies in kovai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->