நாள் குறித்த டாஸ்மாக் கடை ஊழியர்கள்! போராட்டம் அறிவிப்பு! மதுவிற்பனை பாதிக்கப்படுமா?!
tasmc staffs protest announce
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சுமார் 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடை ஊழியர்கள் போராட்டம் செய்ய போவதாக அறிவித்துள்ளனர்.
கோரிக்கை அட்டை அணிந்து ஒரு வாரம் போராட்டம் நடத்திய நிலையில், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.
அதன்படி வரும் 25ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை இரண்டு மணி வேலை நிறுத்தம் செய்யப்போவதாக டாஸ்மாக் கடை ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இந்த இரண்டு மணி நேரம் மட்டும் மதுவிற்பனை தடை பட வாய்ப்புள்ளது.
English Summary
tasmc staffs protest announce