தடைகள் உடைத்து மகனே வென்று வா... தந்தாதிதானே... டாஸ்மாக் வரிசை சோதனை ட்ரைலர் வீடியோ.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மதுபான விற்பனையானது நாளை முதல் துவங்கவுள்ள நிலையில், மதுபான கடைகள் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்படும் என்றும், இந்த நேரத்தில் அணைத்து தரப்பினரும் மது வாங்க குவிந்த வண்ணம் இருப்பார்கள் என்பதால் நேரம் அறிவிப்பட்டுள்ளது. 

மேலும், காவல் துறையினர் டாஸ்மாக் கடைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவும், சமூக இடைவெளியை கடைப்பிக்கின்றனரா? என்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைப்போன்று டாஸ்மாக் கடைகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட விற்பனை மையம் செயல்படவும் அறிவுத்தப்பட்டுள்ளது. 

இதனைப்போன்று காலை 10 மணிமுதல் மதியம் 1 மணி வரை 50 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மதுபானம் வாங்கலாம் என்றும், மதியம் 1 மணிமுதல் 3 மணிவரை 40 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்களும், மாலை 3 மணிமுதல் 5 மணிவரை 40 வயதிற்குள் இருக்கும் நபர்களும் மதுபானம் வாங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், மதுபான கடைகளில் முன்னதாகவே பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், திருப்பூரில் மதுபானம் வாங்க வரும் நபர்கள், குடையுடன் பல தடைகளை தாண்டி வந்து மதுபானம் வாங்கும் சோதனை முன்னோட்டம் நடைபெற்றுள்ளது. இது குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tasmac trailer by drunken people at tiruppur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->