டாஸ்மார்க் வழக்கில் தமிழக அரசை பங்கப்படுத்திய உயர்நீதிமன்றம்.!! - Seithipunal
Seithipunal


ஊரடங்கு உத்தரவு இருந்து சமீபத்தில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. அதில் அனைத்து மாநிலத்திலும் மதுக்கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. குறிப்பாக தமிழகத்தில் மது கடை திறந்த முதல் நாளே சுமார் 175 கோடி வருவாய் வந்ததாக தகவல் வெளியானது. இரண்டாவது நாள் 250 கோடியை தாண்டியது கூறப்படுகிறது. 

அதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் கூறிய பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு பின்பற்றவில்லை என கூறிய தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  

அதைத்தொடர்ந்து தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு கடந்த சனிக்கிழமை  மேல்முறையீடு செய்தது.

இந்நிலையில், மக்களின் உயிரை விட டாஸ்மாக் மூலம் வருவாய் திரட்டுவது முக்கியமானதா ? என டாஸ்மாக் திறப்பு வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது.

பொது அமைதி சீர்குலைந்தால் நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு இருக்காது. நீதிமன்றத்துக்கு மக்கள் உயிர் தான் முக்கியமே தவிர, வருமானம் அல்ல என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் திறப்பு வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றம் இன்று நடத்துகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tasmac case for high court


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->