மதுப்பிரியர்களுக்கு உற்சாக செய்தி.. டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி.!!
Tasmac Bars open 18 September 2020
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் மதுபானக் கடைகள் மூடப்பட்டது. கள்ளச்சாராய விற்பனை கொடிகட்டி பறக்க துவங்கியது. இந்நிலையில், தமிழகத்தில் பல மாதங்களுக்கு பின்னர் மதுபான கடைகள் திறக்கப்பட்டது.
மொத்தமாக தமிழகத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றது. ஆனால், டாஸ்மாக் கடைகள் உடனிருக்கும் பார்களை அரசு திறக்கவில்லை. பார்கள் எப்போது திறக்கும் என்ற எதிர்பார்ப்பு மதுபிரியர்களிடையே மேலோங்கி இருந்தது.
இந்நிலையில், வரும் 18 ஆம் தேதியில் இருந்து டாஸ்மாக் பார்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பார்களுக்கான உரிமையை புதுப்பிக்க வேண்டும் என்றும், காலை 10 மணிமுதல் இரவு 7 மணிவரை பார்கள் இயங்க அனுமதி அளிக்கப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Tasmac Bars open 18 September 2020