தஞ்சை பெரிய கோயிலில் நடக்கும் அநியாயம் குமுறும் பக்தர்கள்.!
tanjai temple lovers miss behave
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு வரும் காதலர்கள் சிலர், கோவில் பிரகாரங்களில் அமர்ந்து கொண்டு காதல் சேட்டைகளில் ஈடுபடுவதாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் தஞ்சை பெரிய கோவிலுக்கு, நாள்தோறும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கோவிலின் உள் சுற்று பிரகார தூண்கள் மறைவிடத்தில் தஞ்சம் அடையும் ஜோடிகள் சிலர், மிக நெருக்கமாக அமர்ந்து காதல் சேட்டைகளில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
இவர்கள் இப்படிப்பட்ட சேட்டையால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர், கோவில் நிர்வாகம் இதனை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
English Summary
tanjai temple lovers miss behave