#Breaking: ஒரேநாளில் ரூ.426 கோடிக்கு விற்பனை.. சென்னையன்ஸ் குடிக்கு முக்கியத்துவம்?..!!
Tamilnadu Tasmac Income 8 May 2021
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலைபரவல் கடுமையான அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில், நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் ரூ.426 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் ரூ.100 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூ.87.28 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.76.12 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.82.59 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் 79.82 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது.
வரும் மே மாதம் 24 ஆம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, குடிகாரன்கள் மதுபானத்தை வீட்டில் வாங்கி ஸ்டாக் வைத்துக்கொண்டுள்ளார்களோ?.. மேலும், தலைநகரில் மதுபான விற்பனை வசூல் ரூ.100 கோடியை கடந்துள்ளது.குறிப்பிடத்தக்கது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Tamilnadu Tasmac Income 8 May 2021