பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறதா? - தமிழக பள்ளிக்கல்வித்துறை பதில்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக, தமிழக அரசு 9 ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை இரத்து செய்து உத்தரவிட்டு, அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும், அதிக மதிப்பெண் பெற விரும்பும் விருப்பமுள்ள மாணவர்கள் தேர்வுகளை எழுதலாம் என்றும் பரவி வரும் வதந்தி உண்மையில்லை. தமிழக அரசின் 9 ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் இரத்து என்ற அறிவிப்பில் தற்போதும், வரும் காலத்திலும் எந்த மாற்றமும் இல்லை. 

தற்போது வாட்சப் உள்ளிட்ட செயலிகளில் பரவி வரும் தகவல் பொய்யானது. இந்த தகவலை நம்பி மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் எந்த விதமான அச்சத்திற்கும் உள்ளாக வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu School Directorate Says about WhatsApp Fake Message for SSLC Exam 21 April 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->