#Breaking: களத்தில் இறங்கிய சசிகலா... தமிழகம் வந்ததும் பேசிய முதல் வார்த்தை.. கொண்டாட்டத்தில் தொண்டர்கள்.!
Tamilnadu Sasikala Pressmeet at Vellore 8 Feb 2021
சொத்துகுவிப்பு வழக்கில் பரப்பன அஹ்ரகார சிறையில் 4 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா, விடுதலையாகி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதன்பின்னர், மருத்துவர்களின் அறிவுரைப்படி பெங்களூரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்கி ஓய்வெடுத்தார்.
பிப்ரவரி 8 ஆம் தேதியான இன்று தமிழகம் திரும்பவுள்ளதாக அறிவிப்பட்ட நிலையில், ஓசூர் எல்லையில் அதிமுக கொடியுடன் காரில் வந்த சசிகலாவிற்கு மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், திருப்பத்தூரில் உள்ள நெற்குத்தி சுங்கச்சாவடி அருகே வைத்து சசிகலா காரில் இருந்தவாறே பேசினார்.
இதன்போது, " புரட்சித்தலைவர் நாமம் வாழ்க, புரட்சித்தலைவி வாழ்க, அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வாழ்க, வளர்க தமிழகம். தீவிர அரசியலில் ஈடுபடுவேன். விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். தமிழக மக்களுக்கு அனைத்தும் நன்றாக தெரியும் " என்று தெரிவித்தார். துவக்கத்தில், அன்புக்கு நான் அடிமை, கொள்கைக்கு நான் அடிமை என்ற எம்.ஜி.ஆரின் பாடலை மேற்கோள்காட்டி பேச துவங்கினர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Tamilnadu Sasikala Pressmeet at Vellore 8 Feb 2021