7 மாவட்டத்தில் வெயில், 10 மாவட்டத்தில் கனமழை.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தின் கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள மதுரை, திருச்சி, கரூர், தர்மபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம். 

இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மதிய வேளைகளில் திறந்தவெளிகளில் பணி செய்ய வேண்டாமென்றும், வெளியே செல்வதை தவிர்க்குமாறும் தெரிவித்துள்ளனர். மேலும், மீனவர்களுக்கு எச்சரிக்கையாக வட மேற்கு வங்ககடல் பகுதியில் பலத்த காற்றானது மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகம் வரை வீசக் கூடும் என்பதால் வரும் 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

மன்னார் வளைகுடா பகுதியிலும் பலத்த காற்று வீசும் என்றும், அங்கு இரண்டு நாட்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனைப் போன்று தமிழகத்தின் தலைநகரான சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலையாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu rain announcement


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->