தமிழத்தில் இந்த பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு மழை - வானிலை ஆய்வு மையம்.!
Tamilnadu next 3 days possible to rain in some places
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு (28-ந்தேதி வரை) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
English Summary
Tamilnadu next 3 days possible to rain in some places