சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா.. அப்பலோவில் அனுமதி.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்துள்ளது. இதனால் தமிழக அரசு பல கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் கடுமையான அளவு கொரோனா அதிகரித்ததால் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

களத்தில் நின்று பணியாற்றி வரும் பலருக்கும் கொரோனா உறுதியாகி வரும் நிலையில், திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றால் காலமானார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கே.பழனிக்கு கொரோனா உறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் தீவிர காய்ச்சலுடன் அனுமதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அதிமுக தொண்டர்கள் பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Law Minister CV Shanmugam corona virus test positive


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->