தமிழகம், புதுவையில் இடியுடன் மழை.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு.!!
Tamilnadu have rain announced by Chennai weather forecast
தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என்றும், தமிழகத்தின் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 9 சென்டி மீட்டர் மழையும், கரூர் மாவட்டத்தின் பரமத்தி வேலூரில் 8 சென்டி மீட்டர் மழையும், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் துவக்குடியில் தலா ஆறு சென்டி மீட்டர் மழையும், தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் கன்னிமார் பகுதியில் தலா 5 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது.
மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த ஆறு மணி நேரத்தில் புயலாகவும், அதனைத் தொடர்ந்து 12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவடைந்து, நாளை பிற்பகல் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மகாராஷ்டிரா அதனை ஒட்டியுள்ள தெற்கு குஜராத் கடற்கரையில் பர்கர் மற்றும் தாமன் இடையே கரையை கடக்கும்.
இதன் காரணமாக மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும். லட்சத் தீவு மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு அப்பகுதிக்கு செல்ல வேண்டாம். சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Tamilnadu have rain announced by Chennai weather forecast