துவங்கப்போகும் காற்றழுத்த தாழ்வு நிலை.. வெளுத்துவாங்க காத்திருக்கும் மழை.!!
Tamilnadu have Rain announced by Chennai Regional Meteorological center
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு ஆந்திரா மற்றும் தெற்கு கர்நாடகா பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கடலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர், திருச்சிராப்பள்ளி, கரூர், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும்.
அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வரும் 48 மணி நேரத்திற்கு பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை மழை பெய்ய வாய்ப்பு இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரையில் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு. திருத்தணி பகுதிகளில் தலா ஏழு செண்டி மீட்டர் மழையும். கோவை மாவட்டம் சின்னக்கல்லார். நீலகிரி மாவட்டம் பந்தலூர். திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே பேட்டை பகுதிகளில் தலா ஐந்து சென்டி மீட்டர் மழையும், கோவை மாவட்டம் வால்பாறை, சோலையார், நீலகிரி பகுதிகளில் தலா 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி உருவாக வாய்ப்பு உள்ளது என்றும், மீனவர்களுக்கான எச்சரிக்கையாக ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை மகாராஷ்டிரா கடலோரப் பகுதி, கடலோர கேரளா, கர்நாடக, லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதி, அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று மணிக்கு 50 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வேகம் வீசக்கூடும் என்றும், இப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Tamilnadu have Rain announced by Chennai Regional Meteorological center