வரும் நான்கு நாட்களுக்கு குளுகுளு செய்தியை வெளியிட்ட சென்னை வானிலை ஆய்வு மையம்..!!
tamilnadu have rain announce by weather report
தமிழ்நாட்டில் கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில், வெயிலின் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கமானது தொடர்ந்து குறைந்து வருகிறது.
இந்த நிலையில், வரும் 24 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த அறிக்கையின் படி, தமிழகத்தில் காலை முதலாகவே சில இடத்தில் லேசான மழை பெய்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
இதன்படி வரும் 4 நாட்களுக்கு மழை பெய்யலாம் என்றும், தமிழகத்தில் தூத்துக்குடி, இராமநாதபுரம், மதுரை, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட 15 மாவட்டத்தில் மழை பெய்யலாம் என்றும், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைப்போன்று சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
tamilnadu have rain announce by weather report