#சற்றுமுன்: தமிழக அரசு மத்திய அரசுக்கு பரபரப்பு கடிதம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதமாக குறைந்திருந்த கொரோனா வைரஸ் பரவல், தற்போது அதிதீவிர வேகத்தில் பரவியுள்ளது. இறுதி நேரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்திலும் கொரோனா விதிமுறைகள் சரியாக கடைபிடிக்கவில்லை. 

மக்களும் கொரோனா வைரஸ் பரவல் குறைந்ததை தொடர்ந்து, தங்களின் இயல்பான வாழ்க்கைக்கு தடம் மாறியதால் சமயம் பார்த்து காத்திருந்த கொரோனா தனது வீரியத்தை காத்திருந்தது வெளிப்படுத்த தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்திற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. தமிழகத்திற்கு கூடுதலாக சுமார் 15 இலட்சம் கோவிட்ஷீல்டு தடுப்பூசியும், 5 இலட்சம் கோவேக்சின் தடுப்பூசி வழங்கவும் மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்து கடிதம் எழுதியுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Govt Letter to Central Govt about Corona Vaccine 15 April 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->