டாஸ்மாக் நேரம் மாற்றியமைப்பு?.. அவசர ஆலோசனையில் அதிகாரிகள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலைபரவல் கடுமையான அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நாளையை தினம் முதல் கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உணவகம், தேநீர் கடைகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபான கடைகளை எப்போது? திறப்பார்கள் என்று குடிமகன்கள் அறிந்து கொள்ளவும் ஆர்வமாக இருந்து வருகின்றனர். மேலும், மதுபானக்கடைகள் மூடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், குடிகாரர்கள் முன்னதாகவே மதுபானங்களை வாங்கி ஸ்டாக் வைத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. 

மதுபான கடைகள் பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு மூடப்படும் நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள மதுபான கடைகள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கலாமா? என்ற ஆலோசனை நடந்து வருகிறது. ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் ஏற்கனவே மதுபான கடைகள் காலை 8 மணிமுதல் பகல் 12 மணிவரை மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அதனைப்போன்று தமிழகத்தில் மதுபானக்கடைகள் செயல்படும் நேரம் மற்றும் கால இடைவெளிகள் மாற்றி உத்தரவிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Govt Change Tasmac Time 5 May 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->