வெளி மாநிலங்கள்‌ மற்றும்‌ வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் - தமிழக அரசு.! - Seithipunal
Seithipunal


வெளி மாநிலங்கள்‌ மற்றும்‌ வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும்‌ நபர்களை தொடர்ந்து கண்காணிக்க இ-பதிவு முறை தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌ என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 8 ஏப்ரல் 2021 இன்று முதற்கட்டமாக மீண்டும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்த அறிவிப்பில், " நோய்க்‌ கட்டுப்பாட்டு பகுதிகளில்‌ வசிக்கும்‌ மக்கள்‌, இந்தப்‌ பகுதிகளிலிருந்து வெளியில்‌ வராத வகையில்‌, காவல்‌ துறை, உள்ளாட்சி அமைப்புகள்‌ மற்றும்‌ சுகாதாரத்‌ துறை ஊழியர்களைக்‌ கொண்டு 24 மணி நேரமும்‌ தொடர்ந்து கண்காணிக்கப்படும்‌. 

இந்தப்‌ பகுதிகளில்‌ கிருமிநாசினிகள்‌ தெளித்தல்‌ உள்ளிட்ட நோய்த்‌ தடுப்பு நடவடிக்கைகள்‌ தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதோடு, நோய்க்‌ கட்டுப்பாட்டு பகுதிகளில்‌ வசிக்கும்‌ மக்களுக்கு அத்தியாவசியப்‌ பொருட்கள்‌ கிடைப்பதற்கு உதவி புரிய தன்னார்வலர்களும்‌ நியமிக்கப்படுவர்‌.

வெளி மாநிலங்கள்‌ மற்றும்‌ வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும்‌ நபர்களை தொடர்ந்து கண்காணிக்க இ-பதிவு முறை தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌. பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில்‌ நோய்த்‌ தொற்றைக்‌ குறைக்கும்‌ பொருட்டு, மாநகராட்சியின்‌ ஒவ்வொரு மண்டலத்திற்கும்‌, கள அளவிலான குழுக்கள்‌ அமைத்து கண்காணிக்கப்படும்‌. இதே போன்று அனைத்து மாவட்டங்களிலும்‌, கண்காணிப்புக்‌ குழுக்கள்‌ அமைக்கப்படும்‌ " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Govt Announce E Pass System Intra State Passengers Once Again due to Corona Outbreak 8 April 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->