கொரோனா : தமிழகத்தில் சென்னை தான் டாப்! ஒரேநாளில் இரண்டாம் இடத்தினை பிடித்த மாவட்டம்! ஈரோடு பின்தங்கியது!
tamilnadu district corona update details
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆனது 411 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 102 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.
இந்த நிலையில் தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறது என்ற பட்டியல் வெளியாகி உள்ளது. அந்த பட்டியலில் சென்னையில் அதிகபட்சமாக 81 பேருக்கு பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று 17 பேருடன் இருந்த திண்டுக்கல் மாவட்டம் தற்போது 43 பேருடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் 30 இல் இருந்து 36 ஆக உயர்ந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் அதே 32, கோவை மாவட்டத்தில் அதே 29, தேனி மாவட்டத்தில் 1 உயர்ந்து 21, நாமக்கல் மாவட்டத்தில் 3 உயர்ந்து 21, கரூர் மாவட்டத்தில் 3 உயர்ந்து 20, செங்கல்பட்டு மாவட்டத்தில் அதே 18, மதுரையில் அதே 15 பேருக்கும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 10, விருதுநகர் மாவட்டத்தில் 11 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் 11 பேருக்கும், திருவாரூர் மாவட்டத்தில் 12 பேருக்கும் சேலம் மாவட்டத்தில் 8 பேருக்கும், ராணிப்பேட்டை கன்னியாகுமரி சிவகங்கை நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் தலா 5 பேருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மட்டும் 4 உயர்ந்து 9 ஆகவும் காஞ்சிபுரத்தில் நான்காகவும் திருவண்ணாமலையில் இரண்டு ராமநாதபுரத்தில் இரண்டு திருவள்ளூர் வேலூர் தஞ்சாவூர் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒன்று என பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 35 பேரும் திண்டுக்கல் மாவட்டத்தில் 26 பேரும் விழுப்புரம் மாவட்டத்தில் 10 பேரும் திருநெல்வேலி மாவட்டத்தில் 6 பேரும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் முதல்முறையாக 5 பேரும் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த பட்டியலில் 27வது மாவட்டமாக நாகப்பட்டினம் மாவட்டம் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
tamilnadu district corona update details