சென்னை மாநகர ஆணையருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடிதம்.! - Seithipunal
Seithipunal


ரிப்பன் மாளிகை கட்டடத்தில் இருந்த “தமிழ் வாழ்க” பெயர் பலகை அகற்றம் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் பெயர் பலகை உடனே வைத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளது.

இது குறித்த கடிதத்தில், " தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் நூற்றாண்டு கண்ட சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை கட்டடத்தில் இருந்த தமிழ் வாழ்க என்ற பெயர் பலகை அகற்றப்பட்டிருப்பது, அதிர்ச்சியளிக்கிறது.

ஈ.வெ.ரா. பெரியார் சாலையை வெஸ்டர்ன் கிராண்ட் டிரங்க் ரோடு என்று பெயர் மாற்றம் செய்தது, தமிழ் வாழ்க பெயர் பலகையை அகற்றுவது என தமிழ்மொழியையும் தமிழக தலைவர்களையும் அவமதிக்கும் போக்கு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அரசே இத்தகைய செயலில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல.

எனவே, பெருநகர சென்னை மாநகராட்சி அமைந்துள்ள ரிப்பன் மாளிகை கட்டடத்தில் “தமிழ் வாழ்க” பெயர் பலகையை மீண்டும் வைத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறோம் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CPIM Wrote Letter to Chennai City Commissioner 16 April 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->