திண்டுக்கல் - மதுரை வருவாய் கோட்டங்களில் மலைவேடன் பழங்குடியின மக்களுக்கு இனச்சான்றிதழ் வழங்கிட சி.பி.ஐ.எம் கடிதம்.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் - மதுரை வருவாய் கோட்டங்களில் மலைவேடன் பழங்குடியின மக்களுக்கு இனச்சான்றிதழ் வழங்கிடுக என தலைமைச் செயலாளருக்கு - சிபிஐ (எம்) கடிதம் எழுதியுள்ளது.

திண்டுக்கல், மதுரை வருவாய் கோட்டங்களில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மலைவேடன் பழங்குடியின மக்களுக்கு இனச்சான்று வழங்கிட அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். இம்மக்களுக்கு உடனடியாக இனச்சான்றிதழ் வழங்கிட வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் நேற்று (15.9.2021) உயர்திரு. தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில், 

1. மலைவேடன்  என்கிற சாதி (பழங்குடியினர் இனம்) தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு சட்டம், (Scheduled Castes and Scheduled Tribes order (Amendment) Act, 1976 (No. 108 of 1976)  இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 27.07.1977 முதல் மாண்புமிகு இந்திய ஜனாதிபதியின் அறிவிக்கை (Notification) மூலமாக தமிழ்நாடு முழுவதும் மலைவேடன் இனம் வசிப்பதாக அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. "Malaivedan Community has been specified as Scheduled Tribes throughout the Tamil Nadu State".  தமிழகத்தில் அரசிதழ் எண் : 1773, தேதி : 23.06.1984-ல் வரிசை எண்.22-ல் மலைவேடன் பழங்குடியினர் இனம் வசிப்பதாக அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.

2. ஒன்றுபட்ட மதுரை மாவட்டமாக இருந்த காலத்தில் மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட திண்டுக்கல் மற்றும் பழனி வருவாய் கோட்டங்களில் வசித்து வந்த மலைவேடன் இன பழங்குடியின மக்களுக்கு இனச்சான்று வழங்கி வந்துள்ளனர். கடந்த 1984-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு, 1989-ம் வருடத்திற்கு முன்னர் வட்டாட்சியர் அவர்களாலும், 1989-ம் ஆண்டிற்கு பிறகு வருவாய் கோட்டாட்சியர் அவர்களாலும் மலைவேடன் ((ST)) இனச்சான்று வழங்கப்பட்டு வந்தன. 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி வருவாய் கோட்டத்தில் வசிக்கும் மலைவேடன் பழங்குடியின மக்களுக்கு இனச்சான்றிதழ் இன்றைக்கும் வழங்கப்பட்டு வருகிறது என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். 1992-க்குப் பிறகு சுமார் 25 ஆண்டு காலமாகவே திண்டுக்கல் வருவாய் கோட்டத்தில் வசிக்கும் மலைவேடன் பழங்குடியின மக்களுக்கு இனச்சான்று வழங்கிட மறுத்து வருகின்றனர். கடந்த 25 ஆண்டுகளாக மலைவேடன் இனச்சான்று வழங்க மறுத்ததுடன் அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளான கல்வி, வேலைவாய்ப்பு, ஒரு தலைமுறையினருக்கே மறுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் வருவாய் கோட்டத்தில் மட்டுமே இத்தகைய மோசமான நடவடிக்கை தொடர்கிறது. 

3. மதுரை வருவாய் கோட்டத்தில் துவரிமான், கோட்டைமேடு, மண்ணாடிமங்கலம், கட்டக்குளம், அச்சம்பத்து, விராட்டிபத்து, அலங்காநல்லூர், வெளிச்சநத்தம் உட்பட சுமார் 11 கிராமங்களில் 8000 மலைவேடன் இன மக்களும், திருமங்கலம் வருவாய் கோட்டத்தில், மாடக்குளம், அவனியாபுரம் மற்றும் வேடர்புளியன்குளம் ஆகிய கிராமங்களில் சுமார் 2000 மக்களும் வசித்து வருகிறார்கள். இம்மக்களுக்கு மலைவேடன் இனச்சான்றிதழ் வழங்குவதில் காலதாமதமும், சில கிராமங்களில் மலைவேடன் இனச்சான்றிதழ் கோரிய மனுக்கள் முறைப்படி விசாரிக்காமல் மற்றும் இவர்கள் கொடுத்த ஆவணங்கள் எதையும் பரிசீலிக்காமல் அம்மனுக்கள் தள்ளுபடி செய்துள்ளதாக அறிகிறேன்.

எனவே, மேற்குறிப்பிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், ஏற்கனவே இனச்சான்று கோரி விண்ணப்பித்துள்ள திண்டுக்கல் வருவாய் கோட்டத்தில் வசிக்கும் மலைவேடன் இனமக்களுக்கு இனச்சான்று வழங்கிடவும், அதேபோல், மதுரை மாவட்டத்தில் மலைவேடன் பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களில் சிறப்பு முகாம் நடத்தி இனச்சான்றிதழ் வழங்கிட தாங்கள் ஆவன செய்து நடவடிக்கை எடுத்திட வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் " என எழுதப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CPIM Letter to Tamilnadu Chief Secretary 16 Sep 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->