ஆர்.பி.ராமசாமி மறைவு... முத்தரசன் இரங்கல்.!!
Tamilnadu CPI Mutharasan Regret RB Ramasamy
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட மூத்த உறுப்பினரும், விவசாயிகள் இயக்கத்தின் மூத்த தலைவருமான ஆர்.பி.ஆர். என்கிற ஆர்.பி.ராமசாமி (85) இன்று அதிகாலை 2 மணிக்கு ஆத்தூர் அருகில் உள்ள அப்பந்த சமுத்திரத்தில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
சிறு வயதில் இருந்தே தோழர் ஆர்.பி.ராமசாமி விவசாயிகள் பிரச்சினைகளில் ஆர்வமாக தலையிட்டு செயல்பட்டு வந்தவர். பல்வேறு இயக்கங்களை கட்டியமைத்து தலைமை ஏற்று போராடியவர். விவசாயிகள் போராட்டங்களை ஒடுக்க காவல்துறையால் பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்.
மக்களின் நன்மதிப்பை பெற்று அப்பந்த சமுத்திரம் ஊராட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக பணியாற்றியவர். இவரது மனைவி சில வருடங்களுக்கு முன்பு காலமானார். மகன் மாசேதுங் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் 1982 ஆம் ஆண்டில் இணைந்து செயல்பட்டு, சேலம் மாவட்டக் குழு உறுப்பினர், மாவட்ட செயற்குழு உறுப்பினர், சேலம் மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டவர். நவ தாராளமயக் கொள்கைகளால் பல்வேறு சவால்களை விவசாயிகள் சந்தித்து வரும் நேரத்தில் தோழர்.ராமசாமி இழப்பு வேதனையானது.
தோழர் ஆர்.பி.ராமசாமி நினைவுகளுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அஞ்சலி செலுத்துவதுடன், அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது " என்று கூறப்பட்டுள்ளது..
Tamil online news Today News in Tamil
English Summary
Tamilnadu CPI Mutharasan Regret RB Ramasamy