சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ், செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனை பணியிடை நீக்கம் செய்க - சி.பி.ஐ.எம் கடிதம்.!
Tamilnadu CPI K Balakrishnan Wrote Letter to Tamilnadu DGP 5 March 2021
சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாசையும், செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனையும் பணியிடை நீக்கம் செய்க என தமிழக டிஜிபிக்கு சிபிஐ (எம்) கடிதம் எழுதியுள்ளது.
தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ராஜேஷ் தாஸ் சிறப்பு டி.ஜி.பி, பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு உள்ளது. இந்த வழக்கு விசாரணையில் பல பகீர் தகவலும் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு சி.பி.ஐ எம் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமிழக டி.ஜி.பிக்கு எழுதியுள்ள கடிதத்தில், " பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸையும், அவர் குற்றத்துக்கு துணை போன செங்கல்பட்டு எஸ்பி கண்ணனையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் போராடிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் 54 பேர் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தமிழக டிஜிபிக்கு கோரிக்கை வைத்து கடிதம் எழுதியுள்ளார் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Tamilnadu CPI K Balakrishnan Wrote Letter to Tamilnadu DGP 5 March 2021